Monday, October 6, 2014

iraiyanbu. காதலாகிக் கசிந்து உருகி என்று இருப்பதே இறையன்பு.

அன்பு   ஹிந்தியில்  ப்ரேம் ,ப்யார்  இதை கபீர் இரண்டரை எழுத்து என்கிறார் .

இஷ்க்  என்ற சொல்லும்  இரண்டரை எழுத்து .

        இந்த இரண்டரை எழுத்துஅன்பு  பற்றித்   தெரியாதவர்கள்  பண்டிதர் ஆக முடியாது என்பது அவர் கருத்து.
 

 காதல்  என்பதில் மூன்றாவது நபருக்கு இடமில்லை

.இருவருக்கு இடையில் உள்ளது  மட்டுமே அன்பு.


ஒரு ஆண்டவனுக்கும்  பக்தனுக்கும் இடையில்  காதல் இருக்கவேண்டும்.

காதலாகிக்  கசிந்து உருகி  என்று   இருப்பதே  இறையன்பு.

 இதில்   ஆசை,பேராசை ,பொறாமை, இருக்கக் கூடாது.

எதையும் கேட்கக்  கூடாது.

 இதில் அபிராமபட்டர் ,ஆண்டாள் ,மீரா ,நந்தனார்,கண்ணப்பநாயனார் ,மற்றும் பல  நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு உண்டு.

 இப்படிப்பட்ட  தெய்வீக அன்பு புறப்பற்று இல்லா அகப்பற்று கொண்ட அன்பு

அது ஏற்படவே ஆண்டவன் அருள் வேண்டும்.

அப்படிப்பட்ட  எதையும் எதிர்பார்க்கா அன்புகொண்ட அடியார்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மதம் ஹிந்துமதம்.

 




No comments: