Wednesday, April 23, 2014

இறைவழி

கடவுள்கருணை இல்லை என 

கடவுளை சும்மாக் கட

 உள்ளத்தினுள்ளே  என்றே 

ஊர்க்கோடி  சாமியாரிடம் 

குறிக்கோள்  இல்லா  மனிதன் 

குறி கேட்டு தறிகெட்டு 

சிக்கனாமாய்ச் சேர்த்த பணமிழந்து 

அர்த்தமில்லா அர்த்த ராத்திரி பூஜை 

அந்தரங்க பூஜை என்று 

மானமிழந்து  மதிகெட்டோர்

செய்திகள்  வந்தாலும் 

உண்மை பக்தர்கள்   உள்ளம் பதைத்தாலும்
உடனடி பலன் பெறும் பேராசை 

உள்ளே இருக்கும் கடவுளை தட்டி எழுப்பாமல் 

உள்ளே கட என்று வெளியில் தேடுவதேன் 

என்பது தான் புரியவில்லை.
கட  கலக்கும்  கடக்கும் வழி யறியா 

கடவுளைத்தேடும்  மனிதர்காள்.

சற்றே சிந்தித்தால் உள்ளே  கடந்து 

துயிலும்  கடவுள் உனக்குள்ளே தோன்றி 
துரித பலன் அளிப்பார் காண்.





  

No comments: