Monday, November 25, 2013

அதுவே நமக்கு பிரம்மானந்தம்.

சனாதனதர்மமும் பாரத மக்களும்.

  நமது  சனாதன தர்மம் அறிவியல்சார்ந்தது.
நடை முறை அறிவியல்.
பாத பூஜை  பாதங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்.
பல நோய்கள் வராமல் இருக்க ,பாதங்களை  அழுத்தவேண்டும்.
நகங்களை கடிக்கக்கூடாது.
நக இடுக்கில் இருக்கும் அழுக்கு பல நோய்களுக்குக் காரணம்.

வைகறைத் துயில் எழு  என்பது சனாதன தர்மம்.
சாஷ்டாங்க நமஸ்காரம் ,தோப்புக்கரணம்,நவக்ராஹ்,கோயில் பிரதக்ஷணம்
அனைத்தும் உடற்பயிற்சிகள்.
உணவு விஷயத்தில் செவ்வாய்,வெள்ளி இரண்டு நாட்கள் பருப்பு.
மிளகுக் குழம்பு,மிளகு ரசம் ,பூண்டுக் குழம்பு ,பூண்டு ரசம் அனைத்தும்
உடலுக்கு நலம்.
எண்ணெய் குளியல்,தீர்த்த யாத்திரை,துளசி,வேம்பு,வில்வம்,அருகம்புல்
போறவற்றை வழிபடுதல்,அவைகளை சாப்பிடுதல், இதுவும் அறிவியல் கலந்த ஆன்மிகம்.
விரதங்கள்,உபவாசம் அனைத்தும் உடல் நலத்திற்கு.
எல்லா பண்டிகைகளும்  தீயவை ஒழிய,நல்லவை நிலைக்க.
செல்வம் பெருக.மகிழ்ச்சி ஏற்பட.
இவைகள் தவிர
உடல் வலு,மன நலம்,மன அமைதி,மன நிறைவு முதலியவைகளுக்கு
யோகா,ப்ராணாயாமம்,தவம் போன்ற பயிற்சிகள்.
நாம் நம் பாரத உணவு,நடைமுறைகளை மாற்றி இன்னல் பெறுகிறோம்.
இதை மாற்றி ஆன்மிக அறிவியல்களைப் பின் பற்றினால்
நாம் நலம்பெற ஆண்டவன் அருள் புரிவான்.
அதுவே நமக்கு பிரம்மானந்தம்.

No comments: