Thursday, November 14, 2013

அதுவே இறைவன் அருளும் நன்னாளாகும் .

அவனியைப் படைத்த     இறைவன்  ,நல்லவைகளைப்

எடுதுத்துச்சொல்ல ,வழிகாட்ட  இறைத் தூதர்கள்

இறைவனடிமைகள் ,இறைப்புலவர்கள்,இறைப்   புரவலர்கள்


கோயில்கள் ,பூஜாரிகள் உருவாக்கினார். ஆனால் ,

உலக மாயையில் பின்வந்தோர்  சிக்குண்டு

  உலகியலில்  உளம் கொண்டு ,ஊழலை வளர்த்து ,

உண்மையை மறைத்து ,அறநெறியில் ஐயம் வளர்த்து

இன்று ஆன்மிகம் .இறைவனருள் என்றாலே பொருள்தான்

அருள் பெற்றோர் என்றால் பொருளு உடையோரே .
ஆலய தரிசனக் கட்டணம் .அர்ச்சனைக்கட்டணம்,
அபிஷேகக் கட்டணம் என்றே ஆலயங்கள்
தனம் படைத்தொருக்கே என்ற மாயை

 பக்தியும் அன்பும் சிரத்தையும் போதும் என்ற நிலை மாறி

ஆன்மீக அருளுக்கு பொன்னும் பொருளும் பிரதானம் என்ற மாயை
உருவாகும் நாள் எந்நாளோ ,அந்நாளே

அறநெறிகள் வளர்ந்து அநியாயங்கள்  ஒழியும் நன்னாளாகும்.

அதுவே இறைவன் அருளும் நன்னாளாகும் .

ஆன்மீகத்தில் தனமே பிரதானமானால்

ஆண்டவனுக்கே பொறுக்காதப்பா .
ஆலயங்கள் சுற்றி வணிகர் கூட்டம்.
அறநெறி வளர்க்கா  ஆடம்பரம் .
பொருள் இல்லாதவன் பாபி என்ற நிலை மாற
அருள்பெற்றோர் கூறும் நாளே ஆண்டவன் மகிழும்  நாளாகும்.


No comments: