Monday, October 21, 2013

பிரார்த்தனை

 பிரார்த்தனை 
 இறைவா! இன்று  உன் அருளால் ,
அறிய வேண்டிய ,அரிய  நண்பன் 
பாலாஜி  அறிமுகம்..
உன்  லீலை உலகம் அறியாது.
உள்ளத்தில் வீற்றிருக்கும் உன்னை 
உலகம் அறிவதோ கடினம்.
உடனடி சுகம் தரும் உனதடி நிழல் அல்ல.
எண்ணங்கள்  நிறைவேற ஏற்றதொரு தருணம்.
பொறுத்தார்  பூமி ஆழ்வார். ஆனால் 
உடனடி பலன் தரா உன்னருள் பலருக்கு 
உண்மை புலப்படா ,புலன்களுக்காப்பாலாய் 
உனதருள் இருப்பதால் உள்ளத்தில் உணரா நிலை.
உனதருள் உணர்ந்து வாழும் எனக்கு 
ஏற்றதோர் வாழ்வு தந்த ஏழுமலையானே .
பாலாஜி அருள் பெறவே வேண்டுகிறேன் தினந்தோறும்.

No comments: