Thursday, October 31, 2013

அதுவே உச்சகட்ட மன நிறைவு.அதுவே பரமானந்தம்.

இறைவன்  இந்த உலகில் இருக்கிறான் என்றே
 உணர்ந்து வாழ்ந்தால் நன்மை பயக்கும்.

ஒவ்வொரு சாதனையாளனும் தான் சாதிக்க எவ்வளவு முயல்கிறான் .

முயற்சி திருவினையாக்கம்  என்றெல்லாம் கூறினாலும்  

மனிதர்கள் எல்லோரும்  தான் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா? இல்லையா? என்றால் நூறு  சதவிகிதம்  "ஆம்"

என்ற விடை வருமா?என்றால் ஐயமே.

நான் இப்படி செய்யலாம்!இத்துறையில் முன்னேறலாம் என்று இருந்தேன் 

ஆனால்  நான் வேறு துறையில் பணி ஆற்றுகிறேன்.

நான் தவறு செய்யவேண்டாம் என நினைத்தேன் .செய்துவிட்டேன்.

ஐயோ !பாவம்!உண்மையில்  அவன் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும்.
அவனை பணியில் நியமித்திருக்கவேண்டும். அவனுக்கு பதவி உயர்வு வந்திருக்கவேண்டும். அவனுக்கு விருது கிடைத்திருக்கவேண்டும்.

அவன் தலை எழுத்து இப்படி அவதிப்படுகிறான்.

இவனுக்கு என்ன தெரியும்னே தெரியலை.காசுமேலே காசு,சொத்துமேலே சொத்து சேருது.

இவன் மாடா உழைக்கிறான் ;கடன்காரனா இருக்கான்.

இவனுக்கு எந்த குறையுமில்ல.ஆனால் அவன் பெண்ணுக்கு கல்யாணம் ஆகலே. மகனுக்கு கல்யாணமாகியும் குழந்தை இல்லை.
செய்யாத வைத்தி யமில்லை.  வேண்டாத தெய்வமில்லை.செய்யாத தான தர்மமில்லை.
ஆகா!என்ன வசதி!கார்,பங்களா!அவன் பையன் பைத்தியம்.இவனுக்கு தான் ஊர்ல பாதி சொத்து.ஒரே பையன். நேற்று குளிக்கும்போது வழுக்கிவிழுந்தான்,
அவனை ஆண்டவன் தூக்கிட்டான்.பாவம்.

தேநீர் கடையில் லாரி புகுந்து  பத்து  பேர்  மரணம். ஓடும் பேருந்தில் தீப்பிடித்து நாற்பத்தைந்து பேர் மரணம். இதெல்லாம் விதியா? மதியா?

இதை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் புரிந்தும் விமர்சித்தும் ஆராய்ந்தும் 
மனிதன் சுயநலத்திற்காக கடமையை மறக்கிறான். கையூட்டு   பெறுகிறான் .

இனத்திற்கும் ,நாட்டிற்கும்,உற்றார் உறவினருக்கும் செய்யும் தொழிலுக்கும் 
துரோகம் செய்கிறான்.

அரசியல் அதிகாரம் பெற்று ஊழலுக்குத்  துணை போகிறான்.

ஒருவன் சேர்க்கும் கோடிகள்,கேடிகள்,அராஜகங்கள்,தீமைகள் எதுவும் மரண நேரத்தில் கை கொடுத்துதவாது.

 இது எப்படி என்றால் இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்வதை

 கிண்டலடி க்கும் கூட்டம்   கட் அவுட் பாலபிஷேகத்திற்கு கண்டனம்

தெரிவிக்காததுபோல். இது பகுத்தறிவு பாசறை.

லக்ஷக்கணக்கில் விநாயகர் சிலை செய்து கடலில் எறிவது போல.

அறிவு பூர்ண மான உண்மையான  அன்பும் பக்தியும் கலந்த சுயநலமற்ற 

பிரார்த்தனையே அருள் பெற வழி. மற்றதெல்லாம் தலை வலி.

அதுவே தலை விதிமாற்றும் மார்க்கம். பக்தி மார்க்கம்.

விதியை மதியால் வென்றோர் பட்டியல்

.விதியால் மங்கி யோர் பட்டியல்.

இதில் எது அதிகம்.?

அதுவே உச்சகட்ட மன நிறைவு.அதுவே பரமானந்தம்.

ஆகையால் மதக்கலவரம் என்பது சுயலத்தின் உச்சகட்டம்.

மனிதநேயம்,மனித ஒருமைப்பாடு ,சர்வஜனா  சுகினோ பவந்து

வையகம் வாழ்க என்று இறைவனை வழிபடுவதே ஆனந்தம்.




































































































No comments: