Thursday, October 10, 2013

இறைப்பற்று கொண்டே இன்னல் படுகின்றோம்;

இறைவனை  நேர்காணல் பற்றி ,
இறைவன் அருள் பெறல் பற்றி
இறைவனை வேண்டுதல் பற்றி
பற்றுடன் பலர் பகர்ந்திட்டாலும்,
பற்றின்றி பற்றுதலே பக்தி யாகும்;

இன்னல்கள் இல்லா இல்லங்கள் இல்லை'
 இன்னுமா இந்த சோதனை!இறைவா!
இறைஞ்சி வேண்டாதோர் யாரும் இல்லை;
இறைவனே வேண்டுகிறான்.


ஆசைகள்  அலைபாயும் அகிலத்தில்
ஆசையே இன்னலுக்கு மூலம் என்றான் புத்தன்;
இச்ச சக்தி வேண்டும் என்றான் இறைவன்;
இசையில் ஏற்படும் ஞானம் இச்சகத்தில்
செயலாக்கம் பெரும் என்றே
முச்சக்தி பற்றி சொன்னான்;
இன்று அதை இங்கிலீசில் புதுமையாக கேட்கிறோம்;

நேர்மை வாய்மை தவறுகிறோம்;
நேர்வழியில் செல்வதில்லை'
நமக்காக ,உற்றாருக்காக,நண்பனுக்காக என்றே
வருவாயில் நாம் செலுத்தும் கவனம்
வறுமையில்ல வாழ்க்கை என
வஞ்சனையில் வீழ்கிறோம்'

தலைவன் தவறு செய்தால்
நம் தலைவன் என்றே மௌனம் காக்கின்றோம்;
ஆன்மிகம் தவறு செய்தால்
நம் மதம் என்றே சம்மதமளிக்கிறோம்;
புதிய சம்பிரதாயங்கள்,ஊர்வலங்கள்,
கோடிக்கணக்கில் சமுத்திரத்தில் விசர்ஜனம்;
தெரிந்தே செய்யும் வீண் ஆன்மிக செயல்கள்;
புரிந்தும் அறிந்தும் தெளிந்தும் மோனம் காக்கின்றோம்;

இறைவனின் திருவிளையாடல் என்றே
விதிவழி செல்கின்றோம்;
இறைப்பற்று கொண்டே இன்னல்  படுகின்றோம்;




No comments: