Friday, June 21, 2013

வீண்!வீண்! வீண்.நாத்திகவாதம்.

நாத்திகம்  பேசும்  நாத்தீகர் களே!

இயற்கைப் பேர் அழிவிலிருந்து  பக்தர்களை ஆண்டவன் காக்க வில்லை

என்ற குற்றச்சாட்டு.

உண்மை -பொய் ,நியாயம் -அநியாயம்  நல்லது-கெட்டது

அறியும் அறிவு படைத்த பகுத்தறிவு படைத்த மனிதன்

இயற்கையை அழித்து  இன்னல் தேடிக்கொண்டால்  யார் குற்றம்.

திருடாதே  தண்டனை கிடைக்கும் என்றால் திருடி தண்டனை பெற்றால்  யார் குற்றம்?

மாற்றான் மனைவி /கணவன்  மேல் ஆசைப்பட்டு ,

கள்ளக்காதலனுடன் சேர்ந்து /காதலியுடன் சேர்ந்து கொலை செய்தால் யார் குற்றம்.

இருவருமே இறைவனை வழி படுவோர்தான்.

ஊழல்   அரசியல்  வாதிகளை வளர்த்துவிடும் மக்கள்,

பசுமை வயல்களை வீடுகளாக .பொறியியல் கல்லூரிகளாக

மாற்றும்   குற்றம் யார் குற்றம்?

ஏறி-குளங்கள்.மலைகள் காணாமல் போவது யார் குற்றம்.

பகுத்தறிவு பிரசாரம் செய்யும் நாட்டில் ,தந்தை பெரியார் பிறந்த நாட்டில்.

ஆண்டவனுக்கு பாலாபிஷேகத்தை வீண்,அதை ஏழைக்குழந்தைகளுக்கு

கொடுக்கலாமே  என்ற தலைவரைப் பின்பற்றி

தனிக்கட்சிகள் தொடங்கி  நாற்பத்து நான்கு ஆண்டுகள்

மாறி-மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சி உள்ள நாட்டில்

நடிக-நடிகை கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் இளைஞர்கள்

கோயில் கட்டும் வெறியர்கள் உள்ள நாட்டில்,

ஆலயங்களின் தெப்பக்குளங்கள்  வறண்டு கிடக்கும் நாட்டில்

ஆலயங்களின் சொத்துக்களை அமுக்கி வாழும் நாட்டில்.

உண்டியல் பணத்தை   கொள்ளை இடும் நாட்டில்,

ஆண்டவன் காப்பாற்றவில்லை என்பது பகுத்தறிவு வாதமல்ல.

இயற்கைச் சீற்றத்திற்கு சட்டத்திற்குப் புறம்பான

அரசியல் மற்றும் சுநல வாதிகளே காரணம்.

 இறைவனல்ல. இறைவனல்ல. இறைவனல்ல.

பழனி வையாபுரிக் கண்மாய்  பாதி பேருந்து நிலையமானது ,

கிரி வீதி கடம்பவனம் அழிந்து ,பழனி ஒரு

வணிக ஸ்தலமாக மாறுவது,

பேருந்து நிலையம் இறங்கினால்  பன்னீர் ஜவ்வாது வாசனை போய்

சிறுநீர் ,சாக்கடை துர்நாற்றம்.


இறைவன் ஏன் காப்பாற்றவில்லை என்றால்.

ரோப் கார் அங்கு நடக்கும் அராஜகம் ஆண்டவனுக்கே பொறுக்காது.

இறைவானா?இயற்கையா ?

மனிதனின் தவறா ?  பகுத்தறிவு மன சாட்சியுடன் சிந்திப்பீர்.

இயற்கை செயற்கையானால் இயற்கையின் சீற்றம் உலக அளிக்கும்.

விஞ்ஞான  உலகின் வெளிப்படை  சூத்திரம்.

வன போஜனம் ,வன மஹோத்சவம் என்பது போய்

வன அழிப்பு  ,

பகுத்தறிவுப் பாசறைகள் இதைப்பற்றி பேசுமா?

ஆண்டவன் ஆண்டவன் என்ற ஒரே இல்லை கோசம்.

இவர்கள் பிரச்சாரத்தினால் கட் அவுட் பாலாபிஷேகம்.

இதைப்பற்றி பேசா பகுத்தறிவுப் பிரசாரம்

வீண்!வீண்! வீண்.நாத்திகவாதம்.

1 comment:

Ranjani Narayanan said...

நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு சரி. மனிதனின் பேராசையால் நதிக, ஆறுகள், குளங்கள் எல்லாம் அழிகின்றன. இயற்கை அன்னை எத்தனைதான் பொறுப்பாள்?