Friday, April 12, 2013

யாரே அனுபவிப்பர்!பாவிகாள் அந்தப்பணம்!

 இவ்வுலகில்  பிறந்த மனிதர்கள் ,

இறைவனின் அபூர்வ ஆற்றல் அறிந்தும்,

இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாமல்,

இன்னல்களை இரு கரங்கொண்டு  வரவேற்கின்றனர்.

  இப்படித்தான் .  எப்படி ?

இறைவன் அளித்த   அறிவை,

நல்வழி தீவழி  என்று புரியும்

அறிவை அறவழியில் பயன் படுத்தாமை.

அவன் அளித்த  ஆற்றலைக்கொண்டு,

நேர்மையற்ற வழியில் செல்லுதல்.

ஒரு அரசு அதிகாரி,

ஆட்சி செய்யும் அமைச்சர்கள்,

தங்கள் அளவுக்கு மீறி கைஊட்டம்

ஊழல்  புரிந்தால் தான்

இவ்வுலக வாழ்க்கை என்றே

வாழ்கின்றனர்.

பணம் சம்பாதித்து   சுகமான வாழ்க்கை

வாழ்ந்தாலும்  அளவுக்கு மீறி

சம்பாதிக்கின்றனர்.

விளைவு?

மன நிம்மதி இன்றியே வாழ்கின்றனர்;

மன சாக்ஷி   அவர்களை மகிழ்விக்காது.

குவியும் செல்வம் தங்கள் செல்வங்களுக்குப்

பயன்படுமா?அவர்களை ஆனந்தமடையச்செய்யுமா ?

அப்பொழுது தான் சாத்தனின் சக்தி வேலை செய்யும்.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்

அமைதியற்ற நிலை.

ஒருவர்  குவித்த பணம்  மற்றவர்களுக்கு

யாருக்கோ பயன் படும்.

இந்த நிலையை  அவ்வையார் பாடுகிறார்

பாடு பட்டுத் தேடி  என்கிறார்--அரும்பாடு பட்டு ,
அதாவது அவன் படும்   பாடு
அந்த செல்வத்தை பல தலைமுறைக்கு சேர்த்து

அதற்காக பல நீதி-அநீதி முறைகளைப் பின்பற்றி,

அந்தப்பணம்  யார் அனுபவிக்கிறார்கள்?

பணத்தைப் புதைத்து வைப்பவர்கள்,

கேடு கேட்ட ம்மநிதர்கள் என்கிறார்.

கூடிவிட்டு  ஆவிதான் போன பின்

இந்த செல்வங்களை யார்தான் அனுபவிப்பார்கள் .

இறைப்பற்றுடன் அவன் அளிக்கும்  பதவியை ,

அதிகாரத்தைப் பலருக்கும் பயன் படுத்த வேண்டும்;

கடமை செய்யாமல் ஊழல் புரிவோர்  பாவிகள்.

அவர்கள் செல்வம் யாருக்குப் பயன்படும்?

ஒருவருக்கும் பயன் படாது.

தீயவழியில்  சேர்த்த பணமே துன்பத்திற்குக்  காரணம்;

விபத்து  நோய்களுக்குக் காரணம்,

அந்திம காலத்தில்
 பல வேதனைகளை
அனுபவிப்பதற்குக்  காரணம்.

ஆண்டவன் அளிக்கும் பதவிகள் மனிதனுக்கு

ஆண்டவன் வைக்கும் பரிசோதனை.

ஆண்டவன் அளிக்கும் செல்வம் ஒரு பரிசோதனை.

அதில் தோற்றவர்களுக்கு  நிம்மதி இருக்காது.

அவனால் வேதனைப்படும் ஆத்மாக்கள் சபிக்கும்;

அது  புரியாமல் தீய வழியிலேயே மனிதன்

பணம் சம்பாதிக்கிறான்.-விளைவு ?

எத்தனை கோடீஸ்வரர்களுக்கு  வாரிசுகள் இல்லை.

இறுதிகாலத்தில் புத்திர சோகத்துடன் இறக்கின்றனர்.

பலவிதமான துன்பங்கள்;நோய்கள்;மனதில் வேதனைகள்;

பாடலை பாருங்கள்:

பாடுபட்டுத் தேடிபணத்தைப்
 புத்தைத்துவைத்த கேடுகெட்ட மானிடரே -!-கேளுங்கள்

கூடு விட்டு ஆவிதான் போன பின்

 யாரே  அனுபவிப்பர்!பாவிகாள் அந்தப்பணம்!








1 comment:

Ranjani Narayanan said...

அருமையான விளக்கம். பாடுபட்டுத் தேடி...பள்ளியில் படித்த பாடல்!