Sunday, February 26, 2012

eeshwar prem

प्यार बिना सारहीन है ,सांसारिक जीवन.कबीर ने अपने पद में लिखा है -माया भरी संसार में शिव कीप्यारी पार्वतीदेवी  तो विष्णू की  प्यारी  लक्ष्मी,ब्रह्मा की प्यारी सरस्वती, भक्त  केलिये  भगवान प्यारा है.यह प्यार  का मोह न ठगता तो  ......जग  जीवन  निरर्थ  हो जायेगा.
हम देखते  हैं, मरणावस्था में भी प्रिया जन जाब तक न आते,जीव तडपत रहता है.प्रिया के नाम कहने पार आंखेन
घुमती हैं. प्रिया के आने पर प्राण चाले जाते हैं..प्यार का अपना विशिष्ट स्थान है.
साधू-संत-सिद्ध-योगी सब के सब सांसारिक  प्यार से हटकर ईश्वरीय प्यार पर लोगों को जोर देते है.
तुलसीदास,तमिळ के अरुनागिरी नाथ,संत  पट्टी  नात्तार ,राजा भर्तृ हरी,किते ही लोग अपने कटू अनुभव के कारण  ,अपनी ईश्वरीय अनुभूती के वश में  सांसारिक प्रेम की अश्लीलता को घृणा  प्रद  पद में लिखकर ,
ईश्वरीय  प्रेम ही शाश्वत आनंद  का मार्ग दिखाते हैं.ईश्वरीय प्रेम में लेन-देन की चर्चा नहीं.धन की आवश्यकता नहीं.दलाल नहीं.पुजारी
की आवश्यकता नहीं.अपने मन की एकाग्र ध्यान ही प्रधान है.संसार में जीकर सांसारिक प्रेम से दूर रहना,
पारिवारिक संबंध में रहकर  भागवत प्रेम में लगना,
ईश्वर प्रेम प्राप्त करना;ईश्वर को रक्षक बनाना.

संत कबीर ने लिखा  है----

जाकै राखै साईयां   ,मारी न सकके कोई १
बाल न बांका करी सकके ,जो जग वैरी होय. 





Friday, February 24, 2012

DHARMAM NILAIKKUM

மனிதன் மனித நேயத்திற்கு அடிமையானால் ஆண்டவன் அவனுக்கு அடிமையாவான்.எத்தனையோ ஏழை அடியார்கள் வீட்டில் இறைவனே சென்று ஊழியம் புரிந்த நிகழ்ச்சிகள் சிவ  புராணத்திலும்  உண்டு சிவா புராணத்திலும் உண்டு.இறைவன் திருவிளையாடலே அன்பர்களை சோதித்து அவர்களின் அன்பு வேண்டுகோளை  நிறைவேற்றுவதுதானே.


ஆனால்,இறைவனே மக்களிடத்தில் ஏமாறும்  கதைகளையும் படிக்கிறோம்.சிவன் பக்தனுக்கு வரம் அளித்து ஓடி ஒழிந்த கதையின் விளைவே
சபரியின் கதை. அதாவது சபரி கிரிவாசன் ஐயப்பன் கதை.பக்தனுக்காக சற்றே அதர்மமும் செய்ததே மகா பாரதக்கதை.தர்மம் குனியக்குனிய அதர்மம் மேலோங்கும்.தர்மத்தின் அன்பு,பொறுமை,சகிப்புத்தன்மை ஆகியவற்றை
தர்மம் இழக்கும் பொது  அதர்மம்  அடியோடு ஒழியும்.ஒளிரும் தர்மம் மீண்டும் 
அசுரசக்தியல் அடக்கிவைக்கப்படும்.
அதுதான் சாத்தானின் வேதம் ஓதுதல்.மாயை.ஷைத்தான்.மது,மாது,ஊழல்,
பணம்,தங்கம்,அறிவியல் சாதனங்கள்,ஆசை,பேராசை,பொறாமை,ஆணவம்,விரோதம்,காமம்  போன்றவை. இந்த குணங்கள் இருந்தால் முட்டாளும் மூடனே.
இன்றைய சமுதாய அமைப்பு தன்னலம் சார்ந்தாலும் நமது ஆன்மீக அமைப்பு,
சோதனை,நோய்,விபத்து,ஊனம் ,குருடு,பைத்தியம்,சித்தபிரமை,செவிடு,கொலை,தற்கொலை,ஆவி,பேய்பிசாசு,
என ஒரு ஆத்மா பயத்தை உருவாக்குகிறது.இதனால் பல அநியாயங்களுக்கு நடுவில் தர்மம் ,இறையன்பு உயர்ந்து விளங்குகிறது.விளங்கியது.விளங்கும்.   

Tuesday, February 21, 2012

alavu athikamaanal

அன்பால் இவ்வுலகம் இயங்குகிறது.அன்பில்லை என்றால் உலகம் அழிகிறது.
அன்பான  காற்று  புயலாக மாறினால் அழிவு.மிதமான மழைஇடியுடன் கூடிய பெரும் மழையாக மாறினால் அழிவு.குறைந்த உணவு ஆரோக்கியம்.மிகுந்த உணவு  நோய்.அவ்வாறே அளவான வருமானம் நிம்மதி.அளவுக்கு அதிக வருமானம் தூக்கமின்மை.அளவுக்கு அதிகமானால் அன்பால் கெடும் குழந்தைகள்.அன்பால் கெடும் நண்பர்கள்.அன்பால் கெடும் .அன்பு அதிகமானால்.அவ்வாறே வெறுப்பும்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.பணப்பற்று பாசம் அறுக்கும்.நீட்டி ஒலிக்கும்.நீதி ஒழிக்கும்.
பெற்றோர்,உற்றோர், நண்பர்கள் தானாக ஒதுங்குவார்கள்.அல்லது பேராசையால் ஒதுக்கப்படுவார்கள்.அதே சமயம் பணம் படைத்தவர்களுக்கு அனைவரும் அடிமையே.

Wednesday, February 15, 2012

prayer vaiyakam kaakka.

உலகநாதனே,

ஊழ்வினைப்பயன்  தீர்ப்போனே,

உடல் எடுக்க உந்து  கோல்   நீயே.

உன் பாதங்களில் சரணம்!சரணம்!

உலகில் உன் திருவிளை யாடல்,

உன் மேல் உளம் உருக வைக்குதய்யா.


எண்ணங்கள் ஏற்றமோ,இறக்கமோ,


முன்னேற்றமோ வீழ்ச்சியோ .

உன் கருணையே என உணர்ந்தேன்.

உன்னையே  சரணடைந்தேன்.

உண்மை நீ ,பொய் உலகு;

யாக்கை பொய்;அனைத்துமே நிலையில்லாமை;

உனது அரும் பெரும் கருணை ஒன்றே,

இவ்வுலகில் அவ்வுலகில் சாஸ்வதம் என்றே,

அனுபவ ஞானிகளின் சத்திய வாக்கு.

அவனியில் துன்பங்கள் பல வந்தாலும்
உன் நினைவகற்றி ஆணவத்தால்,
அநியாயங்கள் பல செய்தே,
தன் நிலையாமை உணரா மக்கள்,,
தனம் தனை சேர்த்திட்டாலும்,
தன் தரம் தனை உயர்த்திட்டாலும்,
தரணியில் புகழ்பெற்றாலும்,
அவனியில் நிலை பெற்றாலும்,
காலன் வந்து உயிரெடுக்கும் நீதி,
நீலகண்டனின்  நீதி.
நித்திலத்தில் நீங்கும் உயிர்,
 சுட்டெரிப்பார் உடலை.
பிடிசாம்பலாகும் உடலே.
புதைத்துவைப்பர்  உடலை,
புழு பூச்சிக்கு இரையாகும் உடலே.
புண்ணியம் செய்தாலும்  ,
புவி ஆட்சி செய்தாலும்.
புவியில் பிறந்தோர்
புவியினில் நிலைப்பதில்லை.
பூமி நாதனே உன் சரணம் .
பூவையின் அழகிலே நாட்டம் வைத்து,
மாதவியிடம் மையல் கொண்டு,
கட்டிய மனைவி கண்ணகியை கதறவிட்டு,
தானும் அழிந்து,மன்னவனும் உயிர் துறந்து,
மதுரையும் அழிந்த கதை.
பட்டினத்தார்,பத்ரகிரி,அருணகிரி என ,

உன்னையே தஞ்சம் அடைந்த ஞானிகள்.
பட்ட அனுபவ  அறிவை ,அவனிக்குத்  தெரிய
பாடிய புலம்பல்.
இன்றைய பட்ட தாரிகள் பாடங்களில் இல்லை.
நீதி போதனைகள் இல்லை.
தர்ம சிந்தனை இல்லை.
உலகநாதனே!!!
உலகைக்காப்போனே!!
அநாதை ரக்ஷகனே!!
தீன பந்துவே!
மாணவ உலகம் தறி கட்டே செல்லும் மார்க்கம்.
கொலை,தற்கொலை,கொள்ளை என்றே மாறும்
மார்க்கம்.
உன்னையே தஞ்சம் அடைகின்றேன்;
வையகம் காக்க,அவனியில் வாழ்வோருக்கு,
நேர்வழி ,நல்வழிகாட்ட
உன்னையே வேண்டி தஞ்சம் அடைகிறேன்;
அவனியில் நேர்மை காக்க ,
அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
அடைகிறேன் சரணாகதி உன்னிடமே.



religious harmony -

அல்ஹம்துலில்ல்லாஹ் -எல்லாப்புகழும் இறைவனுக்கே.
லா ஹவ்ல வள குவ்வத்த இல்லா பில்லாஹ் --நன்மைகளை செய்வதும் தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதும்,மேன்மையும்மகத்துவமும் மிக்க ஏக
இறைவனின் உதவி இன்றி செய்ய இயலாதவை.


பாபர்  தன் மகன் ஹுமாயுனுக்குக் கூறிய அறிவுரை:------
௧.எவ்விதமான சமய வெறுப்பும் இல்லாமல் இருக்கவேண்டும்.
௨.ஒவ்வொரு ஜாதியரோடும் நீதியுடன் நடந்து கொள்ளவேண்டும்.
௩.கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
௪.இஸ்லானிய நெறியை மேலோங்கச்செய்ய அன்பெனும் வாளே பயன் படுத்த
வேண்டும் .
௫.மார்க்க விஷயத்தில் ஷீய,சுன்னா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பொருட்படுத்தாதே.
திப்பு
சூல்தான் பிரகடனம்------
குரான் நற்காரியங்கள்  செய்யும் பொது மட்டும் போட்டி போட்டுக்கொண்டு செய்யச் சொல்கிறது

குர் ஆனின் கோட்பாட்டின்படி சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறைவன் ஒருவனே,அவனுக்குப் பல பெயர்கள் உண்டு.அந்த ஒரே இறைவனிடம் சரணடைகிறோம்.

மைசூர் ராஜ்யத்தில் உள்ளோருக்கு மதவேற்றுமை,ஜாதி வேற்றுமை,வர்க்க வேற்றுமை,ஆகியவை சட்ட விரோதம்.
இந்த அறிவிப்பை சிருங்கேரியின்  பீடாதிபதி மனப்பூர்வமாகப் பாராட்டினார்.

மத நல்லிணக்கம் பாரதத்தில் அனைத்து மக்களிடம் காணப்பட்டது.

ஆதாரம்:-
எம்பால் தஜம்முல்முஹம்மது.---இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்.
-



Tuesday, February 14, 2012

islam anbu

ஒ மக்களே! -சாந்தியை பரப்புங்கள்.ஒவ்வொருக்கொருவர் சாந்தியையும் சமாதானத்தையும்,கொண்டு நற்செய்தி கூறிக்கொள்ளுங்கள்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்.உறவினர்களின் பண்டங்களை கௌரவியுங்கள்.மனிதர்கள் உறங்கும் வேளைகளில் இறைவனை வழிபடுங்கள்.நீங்கள் சாந்தியுடன் நுழைய து உதவும்.

எல்லா மதத்தினரும் கூடியிருந்த இனிய நேரத்தில் நாயகம் (ஸல்) அவர்கள்
செய்த போதனை.
மதங்கள் மனிதர்களை காக்க. வெறுக்க அல்ல. இதற்கு இந்த உரையே எடுத்துக்காட்டு.


Tuesday, February 7, 2012

total surrender=poorna saranaagathi

அன்பிற்கு  உண்டோ  அடைக்குந்தாழ்.

அன்பான அழைப்பை ஆண்டவன் கேட்பான்.அது முற்றிலும் அவனை சரண் அடைவதாக இருக்கவேண்டும்.அதென்ன முற்றிலும் சரண் அடைதல்?
அதாவது பரிபூரண நம்பிக்கை.சந்தேகம் இல்லா பக்தி.என்னை காப்பான மாட்டானா ?  
அவன் இருக்கிறானா இல்லையா?
நான் தினந்தோறும் துதி பாடுகிறேன்.ஆலயம் செல்கிறேன்.bajanai செய்க்றேன்.ஆன்னாலும் என் மனவேதனை தீரவில்லை.துன்பங்கள்.
அலைகள் ஓய்வதில்லை என்ற எண்ணங்களுக்கு இடமளிக்காத தீவீர அன்பு பக்தி.துர்வனின் பக்தி .பிரஹலாதனின்    பக்தி.ஆண்டாளின் பக்தி.மீராவின் பக்தி.
சிந்தை  கலங்காத   பக்தி
அதுதான் சரணாகதி.அந்நிலை யாருக்கும் இல்லை.அவதாரம் எடுத்த ராமனுக்கும் இல்லை.அதுதான் மனித ஜன்மம்.பூர்ண சரணாகதி  பூர்ண க்ருபா
கடாக்ஷம்.
பற்றுள்ள உலகில் எவ்வித பற்றும் இல்லா நிலை.அந்நிலை பரமானந்த நிலை.
இறையன்பு மட்டும் இதயத்தில்.முயன்று பாருங்கள். 

Sunday, February 5, 2012

anbu aanadavan mel en?

இறைவன் மேல் அன்பு


அன்னை நம்மை ஈன்றதால் அவள் மேல் அன்பு.

அப்பா ஆதரவும்,நம் பொருளாதார தேவைகள்
 பூர்த்தி செய்வதால் அன்பு,

அன்பு என்பது அறிந்துவருவது ,

தாய் நாட்டின் மீது அன்பு,

தாய் மொழியின் மீது அன்பு,

உணவு சுவை அறிவதால்,

அனைத்தும் அறிந்து உணர்ந்து,

அனுபவித்து வரும் அன்புகள்.

நாம் உணர்ந்து ரசிக்கும்

ஆசைகள்.

காற்று.

வெப்ப அனல்.

ஆனால்,

காதல்,

கண்டதும் ஏற்படுவது,

மாறக்கூடியது.

மற்றம் அடைவது.

மாறாத காதல் இருந்தாலும்,

தோல்வி   அடைந்தால்


இனம் புரியாத,
அனுபவத்து அறியாத  
மனக்கஷ்டங்கள்.
சூன்ய உணர்வுகள்.
அன்பர்களைக் காணாத,
கலக்கங்கள்.
ஏக்கங்கள்.
பிரிவால் ஏற்படும்,
செயலாற்ற தன்மைகள்,
வேறு எந்த செயலும் செய்யாமல்,
ஒரே நினைவலைகள்,
இந்த உலகக் காதல் நிலை தான்,
அவ்வுலக நினைவில்,
இறைவன் மேல் உள்ளகாதல்.
இரண்டுமே சித்த பிரமை உண்டாக்குவது.
ஆனால் ஒன்று   அறிவை செயல் பட வைக்காது. 
ஆண்டவன் மேல் உள்ள அன்பு அழியாத
அறிவை அகிலத்திற்கு அழிப்பது.








Saturday, February 4, 2012

anbu love

இன்றைய இந்த மாதம் காதலர்- தினம் கொண்டாடும் மாதம்.பெற்றோர் வேதனைப்படும் மாதம்.
.அவர்கள் தெரியாமல் வாலிபர்கள்   பெற்றோர் பணத்தையே திருடும் . திருடர்கள்.

பாட்டிக்கு மருந்து வாங்க வைத்த பணம்,
வீட்டுக்கு மின் கட்டணம் கட்டும் பணம்,
அவசரச் சிலவுக்கு வைத்த பணம்-என 
அனைத்தும் மாயமாய் மறையும் தினம்.
மாயை உலகில் நிலைத்த பெற்றோர் அன்பை 
தொலைத்து தொல்லை கொடுக்கும் தினம்

காதலியை ஒரு பக்கமாக காதலிக்கும் .
மற்றொரு ஆடவனின் வயிறை எரியவக்கும் 
தினம். 
வீட்டில் இருந்து வெளியில் சென்ற 
மகனோ,மகளோ, வரவில்லை என்ற
பதட்டத்துடன் பல நடவடிக்கையில் ஈடுபட,
காதலர்களுக்கு வேண்டாதவர்கள்,
போராட பல அடிதடிகளும் கத்தி குத்துகளும்,
காவல் நிலையப்புகார்களும்.
கலவரங்களும் நடக்கும் தினம்

அன்பே பெரிதென்றாலும்  .,
அன்பு செய்து திருமண செய்தோரும்,
தன் வாரிசுகளின் காதலை வெறுக்கும் 
தினம்.
ஜாதிகள் இல்லை என்று முழங்கும்,
தலைவர்களும் jaathi வெறி காட்டும் தினம்.

பல போராட்டங்கள்,கொலைவெறி  ,இன மத வெறுப்புகள் இருப்பினும் 
புராண காலம் முதல்,இன்றுவரை
காதல் வளர்ந்து கலப்பினத்தால்.
உலகை ஒற்றுமைப்படுத்தும் புனித தினம். ,








Wednesday, February 1, 2012

kabeer daasarum anbum

அன்பு என்பது பணம் என்பதும் இணைந்து இருப்பதால் வந்தால் அது அன்பாகாது.உண்மையான அன்பு வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து வருவதில்லை .
நாட்டை  ஆளும்  மன்னன்  நாட்டிற்காக போராடி  உயிர்  இழக்கும்  போர்வீரன்.
இருவரில் ஆடம்பரமாக ஆனந்தமாக  சுயநலமாக போர்வீரன் இருக்க ஆசைப்பட்டால்  அரசனின் வெற்றிக்கனவுகள் பாதிக்கும்.உண்மையான அன்பு துறவு நிலை. பற்றற்ற நிலை. இந்நிலையில்  தான் இறைவனைக் காண முடியும்.காண என்றால் ஆன்மீகவாதிகள் இடையில் சர்ப்படாது.இறைவனை தரிசிக்க நுடியும் என்ற வாடா சொல் போடவேண்டும் அதுதான் இறைவன் ஏற்பான் என்ற வாதம்.இதனால் வட மொழி தெரியாதவர்கள் ஆன்மிகம் பற்றி பேசவோ ஆண்டவன்  மேல் புகழ் பாடல் பாடவோ   முடியாது. 

கபீர் படிக்காதவர். மக்கள் மொழியில் ஆழமான இறைப்பற்றைப் பற்றி பாடினார்.
அதனால் அவர் ஆழ்ந்த அனைவருக்கும் புரியும் கருத்துக்கள் அமுக்கப்பட்டன.
இந்நிலை பாரதத்தில் இருக்கும் வரை நூறு சதவிகித ஒற்றுமை உணர்வு மொழி சர்ச்சையில் பாதிக்கப்படும்.இறைவனை புரியும் மொழியில் போற்றவேண்டும்.
இல்லையெனில் இறைப்பற்று இனம் தெரியாமல் போகும்.
ஆன்மீக நூல்கள் எளிய தமிழில் வந்த தும் தான் தமிழகத்தில் இறைப்பற்றாளர்கள்  பெருகி வந்தனர்.
துளசி தாசர் ராமாயணம் வந்த பிறகுதான் வட இந்தியாவில் ராமாயணம் இல்லம் தோறும் படிக்கப்பட்டு வருகிறது.
ஆன்மீகக் கண்காட்சியில்  தமிழ் ஹிந்து மத நூலக என்ற கண் காட்சி. தமிழ்க்கடவுள்  முருகன்.ஆண்டவனே ஒரு மொழிக்காக என்ற நிலை.
புரியாத மொழி வணக்கம் போராட்டம் உண்டு பண்ணும். அதனால் தான் வட கலை,தென் கலை நாமங்கள்.வழக்குகள். வெறுப்புகள் தவறு துவேஷங்கள்.
ஒரு மொழி அறியாதவனைத் தாழ்ந்தவன் என்று ஒதுக்கியதன் பாவத்தை
ஒரு இனம் அறிந்து தன நித்ய அனுஷ்டானங்களை மறந்து எங்கே அவன் என்ற தொடராக தேடவைத்துள்ளது.இதற்குப்பொருள் பொருளாதாரமே.
பல கோயில்கள் பாழடைந்து உள்ளது என்றால் பொருளுள்ள கோயில் பொருளற்ற கோயில்களை அழிக்கப்பார்த்து  தன்னை வளம் பட பார்த்துக்கொள்வதுதான்.
எங்கும் இறைவன்.தூணிலும்   இறைவன்.ஒவ்வொரு செயலிலும் இறைவன்
என்ற உயர் தத்துவம் கபீரின் பக்தி மார்க்கம்.

kabeer anbu love devotion

கபீர்--அன்பு.
இறைவன் என்னிடம் எப்பொழுதும் இருக்கவேண்டும்.அவன் என்னிடம் இருந்து பிரியாத அளவுக்கு நான் அவனிடம் அன்பும் சிரத்தையும் பக்தியும் காட்டவேண்டும்.நான் துயிலும் பொழுது என்னிடம் இறைவன் பேட்டிகாணவேண்டும்.
விழித்திருக்கும் போதும் என் மனதில் அவன் உணர்வே இருக்கவேண்டும்.அவன் பிரிவால் என் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி கண்கள் சிவக்கவேண்டும்.நான் என்னையே மறக்க வேண்டும்.அவன் நினைவு மட்டும் அவனிடம் இருக்கவேண்டும்.அவன் என்னிடம் இருந்து பிரியக்கூடாது.
सोवों तो सुपने मिलें,जागों तो मनमाहीं ,
लोयन राता सुधि हरी, बिछुरत कबहूँ नाहिं.

२.

प्रेम न बाड़ी  ऊपजे,प्रेम न हाट बिकाय.

रजा प्रजा जेहि रुचे,शीश देई लै जाय.

கபீர் அன்பு என்பது ஆணவம் அழிந்து தானாக பெறப்படுவது என்கிறார்.
அன்பு என்பது தோட்டத்தில் விளைவதில்லை.சந்தையில் விற்பனை
செய்யப்படுவதில்லை.மன்னனோ மக்களோ யாருக்கு இது
விருப்பமாகிறதோ  அவன் தன்
 தலை கொடுத்து அன்பைப்பெருகிறான்.
௩.
छिन्हिन चढे,छीन उतरे,सो तो प्रेम न होय.
अघात प्रेम पिंजर बसे,प्रेम कहावै सोय.

கபீர்   அன்பு என்பது நிலைத்து   நின்றால்   தான் அன்பாகும் என்கிறார்.
ஒரு நொடியில் ஏற்று முகமாகி ,மறு நொடியில் இறங்குமுகமாவது
 அன்பாகாது.என்றும் குறையாதஅன்பாக  இறைவன் என்ற கூட்டில் நிலைத்து
நின்றால் தான் அன்பாகும்.

௪.


kabeerin paarvaiyil bhaktiyum anbum kabeer eeradi.

kabeer::---- bakthiyum anbum
(௧)
जब लग नाता जगत का,तब लग बकती न होय.
नाता तोड़ी हरी भाजी,भक्त कहावै सोय.

கபீரின் நோக்கில் பக்தன் என்பவன் உலகின் பற்றைத் துறந்தவன்.
உலகப்பற்றைத் துறந்தவன் இறைவனை வழிபடுகிறான்.அவன் தான் பக்தன்
என்று சொல்லப்படுகிறான்.

(2 )
कामी ,क्रोधी ,लालची,इन ते भक्ति न होय.
भक्ति  करै कोई  सूरमा,जाति बरन कुल खोय.

உண்மை யான   பக்தன்  யார்  என்ற  என்று இன்றைய போலி பக்தர்களின்
நிலையை எலாம் நூற்றாண்டிலேயே கபீர் உணர்த்தியுள்ளார்.
பெண்ணாசை பிடித்தவன்,கோபக்காரன்,பேராசை உள்ளவன் பக்தனாக  முடியாது. இனம்,ஜாதி  ,குலம் ,வண்ணம் போன்ற வேறுபாடு பார்க்காத
சூரன் தான் பக்தி செலுத்தமுடியும்.
(இன்றைய பக்தி ஆசார்யார்களிடம் உலகப்பற்றும், ஆடம்பரமும்,பணம் பணம் ,பொன் என்ற ஆசைகளும் ,தீக்ஷை பெற குறைந்த பக்ஷம் பணமே பிரதானம்.பத்தாயிரம் இல்லாமல் சில பக்தர்கள்,கடவுள் என்று கூறும் ஆஷ்ரமத்தில் நுழைய முடியாது.)இது கபீரின் தீர்க்ஹா தரிசனம் என்றே கூறலாம்.
(௩)
जल ज्यों प्यारा माछरी,लोभी प्यारा दाम.
माता प्यारा बालका,भक्त प्यारा नाम.
இறையன்பனின்  பற்று இறைவன் மேல் அளவு கடந்து இருக்கும்.
மீனிற்கு தண்ணீர் மேல் அன்பு. பிரிந்தால் உயிர்  போய்  விடும்.
பெராசைக்காரனுக்கு பொருள்கள் மேல் ஆசை.அவனுக்கு தான் விரும்புவது மற்றவர்களிடம் கண்டாலே வேதனைதான்.ஈன்றெடுத்த தாயிக்கு
தன குழந்தையின் மீது அளவற்ற பாசம்.அவ்வாறே பக்தன் தன்
இறைவன் நாமத்தில் அன்பு வைக்கிறான்.
(4)
भक्ति गेंद चौगान की,भावै  कोई लै जाय.
कह कबीर कछु भेद नहीं ,कहा रंक कह राय.

கபீர் இறைவன் மேல் உள்ள  பக்தி  பந்து போன்ற ஒரு விளையாட்டுப் பொருள்
என்கிறார். அந்த பக்தி என்ற பந்தை யார் வேண்டுமானாலும் எடுத்து
ஆனந்தமாக  விளையாடலாம்.இதில் பணக்காரன் ஏழை என்ற வேறுபாடு
கிடையாது.கடவுளுக்கு ஏழை-பணக்காரன் இருவருமே சமம்
தான்.இறைவனை  ADAIYA உண்மையான பக்தி தான் அவசியம்.உயர்ந்த -
தாழ்ந்த ஜாதி இன வேறு பாடு கிடையாது.
(பணம் படைத்தவனும் மகிழ்ச்சி  இன்றி  உள்ளான்)(பக்தி தான் அமைதி தரும்)
(5)

अर्ब खरब  लौं दर्ब  है, उय अस्त लौं राज.
भक्ति महातम ना तुले,ये सब कौने काज.

கபீர் பக்தியின் மகத்துவத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது  என்கிறார்.
பணத்திற்கும் செலவத்திற்கும் கோடி-லக்ஷம் என்ற அளவிற்குத்தான் மரியாதை.ஒரு ராஜ்யத்தின் எல்லை எழுச்சியும் வீழ்ச்சி  வரை தான். 
அளவிட முடியாத செல்வம் ,ராஜ்ஜியம் பக்தி என்ற மகாத்மியத்தின் முன்
துச்சமானது.நிலையற்ற செல்வம்.நிலையில்லா பக்தி.